சாதனைகள்

சாதனைகள்

நாத்திகம் பரவலாக இருந்த காலகட்டத்தில் ஆன்மீகவாதிகள் கண்களை மூடிக்கொண்டு இருந்த ஒரு காலத்தில், விழிப்புணர்வு இல்லாத இந்து சமூகத்தை சுற்றியுள்ள அபாயங்கள் குறித்து இந்துக்களிடையே பிரச்சாரம் செய்வதற்கும், ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், இந்து மதத்தை வலுப்படுத்துவதற்கும், இந்துக்களுக்காக வாதாட – போராட- பரிந்துபேச 1980 ல் இந்து முன்னணி தொடங்கியது. தமிழகத்தின் மூலை முடுக்குகளெல்லாம் இந்துமுன்னணி ஆரம்பிக்கப்பட்டன. எங்கெங்கெல்லாம் இந்துக்களுக்கு , இந்து கோவில்களுக்கு , இந்து பெண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் இந்துமுன்னணி களத்தில் இறங்கியது. இந்து கடவுளர்களை இழிவு படுத்திய போதும் , இந்து நம்பிக்கைகளை கொச்சைப் படுத்தியபோதும் அவர்களை எதிர்த்து வாதாடவும், பதிலுக்கு பதில் கேள்வி கேட்கவும் தொடங்கியது இந்துமுன்னணி.

கடவுள் இல்லை என்று பேசிக்கொண்டு ஆட்சிக்கு வந்து , பின் இந்துக்கோவில்களை கொள்ளையடிக்க இந்து சமய அறநிலையத்துறை ஆரம்பித்து, அதன் மூலம் கோவில் சொத்துக்களை , நிலங்களை கொள்ளை அடிக்கும் கும்பல்களை எதிர்த்து போராடி நிலங்களையும் சொத்துக்களையும் மீட்டது இந்துமுன்னணி. மதமாற்றத்தையும், பயங்கரவாதத்தையும் தட்டிக் கேட்டது இந்து முன்னணி. பெண்கள் தன்னம்பிக்கையுடனும், ஒற்றுமையுடனும் சமூகத்தில் ஆன்மீகப் பணிக்காக ஈடுபட பல்வேறு இடையூறுகளைக் கடந்து பூஜை மற்றும் வழிபாடுகள் மூலமாக மாற்றத்தை ஏற்படுத்தியது இந்துமுன்னணி. இந்த 40 ஆண்டுகால வரலாறு சாதாரணமானது அல்ல ... நெருப்பாற்றில் நீந்திய வரலாறு. இது வெறும் வரலாறல்ல ..... வியர்வையும் . இரத்தமும் சிந்தி இந்துமுன்னணி ஊழியர்கள் கண்ட வெற்றிச் சாதனைகள் ... சில சரித்திர சாதனைகள் ... அவைகளை முழுவதும் அறிந்துகொள்வோம் ....

சரித்திர சாகசம் – வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயம்

சில ஆண்டுகளுக்கு முன்புவரை வேலூர் என்றதும் நினைவுக்கு வருவது வேலூர் சிறைச்சாலையே . ஆனால் சரித்திரத்தில் வேலூர் சிப்பாய்ப் புரட்சி என்பது குறிப்பிடத்தக்கது . நமது நாட்டில் ஆங்கிலேயனை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் என்பது 1857 ல் நடைபெற்றதைக் குறிப்பிடுவார்கள் . இதனை ஆங்கிலேய தாசர்கள் சிப்பாய் கலகம் என்று அழைத்தார்கள்.

மேலும் படிக்க

இராமாயணத் திருவிழா – மகோத்சவம்

அயோத்தி இராம ஜென்ம பூமியில் இராமருக்கு மாபெரும் ஆலயம் அமைக்க வேண்டும் என்று நாடு நெடுகிலும் பேரெழுச்சி ஏற்பட்டது . ஸ்ரீராமாயண மஹோத்சவ பெருவிழா 2 0 0 7 ஆண்டு துவக்கப்பட்டது . இவ்விழா குறித்து காஞ்சி சுவாமிகள் , மற்றும் அனைத்து ஆன்றோர்களிடம் இராம கோபாலன் அவர்கள் கலந்தாலோசித்தார் . தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இராமாயண நூல் இருக்க வேண்டும் என முடிவு எடுத்து தமிழகத்தின் தவப்பயனாக தோன்றிய சுவாமி சித்பவானந்தர் அவர்கள் எழுதிய இராமாயண காவிய நூலை பட்டித் தொட்டி எங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்பினார் .

மேலும் படிக்க

கோடி ராம நாம ஜெப வேள்வி – தனுஷ்கோடி

1992 பிப்ரவரி- இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தனுஷ்கோடியில் மறக்க முடியாத மிகப்பெரிய சாதனையாக ஒரு கோடி ஸ்ரீ இராமநாம ஜெப வேள்வி நடைபெற்றது . 1965 புயலுக்கு பின் இராமேஸ்வரம் அதன் முக்கிய பகுதியான முக்கடலும் சந்திக்கும் தனுஷ்கோடியானது கடலில் மூழ்கி அழிந்து போனது . போக்குவரத்து துண்டிக்கப்பட்டு விட்டது இந்த சூழ்நிலையில் அந்த இடமானது முஸ்லீம்களால் மிகபெரிய போதைபொருள் கடத்தல், கள்ளக்கடத்தல் நடக்கும் கேந்திரமாக மாறிப்போனது. இதைப்பற்றி இந்து முன்னணி கவலை கொண்டது. தனுஷ்கோடியில் ஸ்ரீ இராமபிரான் தனுசை ஊன்றிய இடம் இந்துக்களுக்கு மிக முக்கிய தீர்த்த ஸ்தலம். அதன் புனிதத்தை மீட்க வேண்டும். பழையபடி மக்கள் சகஜமாக சென்று வரக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என தீர்மானித்தது .

மேலும் படிக்க

கோவில் நிலங்களை மீட்கும் இமாலயப் பணி

யாராவது ஒருவருக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நீதிமன்றத்திற்கு செல்வார்கள் . ஆனால் நீதிமன்றத்தாலேயே பிரச்சனை என்றால் என்ன செய்வது ? அதற்கும் தீர்வு கண்டு வெற்றி பெற்றது இந்து முன்னணி . திருநெல்வேலி மாவட்டம் , அம்பாசமுத்திரம் அருள்மிகு காசிநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான நகரின் பிரதான சாலையில் அமைந்துள்ள 94 சென்ட் நிலத்தை கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை நீதிமன்ற கட்டிடம் கட்ட வெறும் ரூ .2,10,735 / -க்கு இந்து சமய அறநிலையத்துறை , நீதித்துறைக்கு விற்பனை செய்ய அறிவிப்பு வெளியிட்டது .

மேலும் படிக்க

சமுதாய நல்லிணக்க பணியில் முத்திரை

உலகத்தில் பல நாடுகள் உள்ளன. அதில் அனைத்திலும் தீண்டாமை உள்ளது . இந்த தீண்டாமையை போக்குவதற்காக, வேரோடு அகற்றுவதற்காக நமது பாரத தேசத்தில் ஆழ்வார்களும் , நாயன்மார்களும் பல்வேறு முயற்சி எடுத்து உள்ளனர். அந்தத் திருப்பணியை இந்துமுன்னணி சிரமேற்கொண்டு செய்கிறது.

தமிழகத்தில் பெரிய குளம் , தேவதானப்பட்டி, கண்டனூர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திட்டகுடி , கடலூர் மாவட்டங்களில் உள்ள காட்டு மன்னார் கோயில், மதுரை அருகில் உள்ள எரம்பட்டி போன்ற பகுதிகளில் ஏற்பட்ட சாதி மோதல்களில் இந்து முன்னணி மூலமாக சமுதாய தலைவர்களை அழைத்து நல்ல தீர்வு கண்டது .

மேலும் படிக்க

செங்கோட்டையல்ல காவிக்கோட்டை - திருப்பூர்

திருப்பூர் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும் . 25 ஆண்டுகளுக்கு முன் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளின் தொழிற்சங்கங்களும் பலம் பெற்றிருந்தன. ஆதிக்கம் செலுத்தி வந்தன. இவர்களை மீறி யாரும் தொழிற்சாலை நடத்த முடியாது . எந்த தொழிலாளர்களும் வேலைக்கும் செல்ல முடியாது என்ற நிலை இருந்தது.

மேலும் படிக்க

திருவண்ணாமலை அன்னதானம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்ய வருகை தருவார்கள். பத்து நாட்கள் கொடியேற்றத்துடன் துவங்கும் திருவிழாவானது பரணி தீபம் அதிகாலை கோவிலில் ஏற்றப்பட்டு மாலை மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இந்தத் திருவிழாவைக் காண வரும் பக்தர்களுக்கு திருவண்ணாமலையில் இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் 2005 முதல் மூன்று நாட்கள் தொடர் அன்னதானம் வழங்கி வருகிறது.

மேலும் படிக்க

தொலைக்காட்சி- இந்து விரோத போக்குக்கு தக்க பதிலடி

விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா என்கிற நிகழ்ச்சியில் இந்து சன்னியாசிகளை கேவலப்படுத்தும் நோக்கில் கார்ப்பரேட் சுவாமிகள் என்கிற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டதை அறிந்து நாம் நம்முடைய எதிர்ப்பை பதிவு செய்தோம் .ஆனால் நிகழ்ச்சி பற்றிய விளம்பரம் தொடர்ந்து கொண்டு இருந்தது . நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆண்டனி இது யாரையும் புண்படுவதற்கான நிகழ்ச்சி அல்ல என்று கூறினார் . நாம் இதை அனுமதிக்க முடியாது என கடுமையாக எதிர்த்தோம்.

மேலும் படிக்க

பசு இறைச்சி கொலைக் கூடம் தடுத்து நிறுத்தப்பட்டது

1994 - ஆம் வருடம் அப்போதைய அ.இ.அ.தி.மு.க. அரசைப் பயன்படுத்தி கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த எம்.கே.யூசுப் அலி என்பவர் ஃபேர் எக்ஸ்போர்ட்ஸ் ( இந்தியா) என்ற நிறுவனத்தின் பெயரில் பழச்சாறு மற்றும் ஜாம் போன்றவை தயார் செய்யும் தொழிற்சாலை அமைப்பதாகக் கூறி அனுமதி பெற்றார் . இத்தொழிற்சாலையைப் பொள்ளாச்சிக்கு அருகில் கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ள கணபதிபாளையத்தில் அமைப்பதாக கூறி அப்போதைய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரத்தினம் என்பவரைப் பயன்படுத்தி 1.20 லட்சம் மதிப்பிலான 200 ஏக்கர் நிலங்களை 50 - 60 ஆயிரம் விலை கொடுத்து வாங்கினர்.

மேலும் படிக்க

மண்டைக்காடு பகவதி ஆலயம் – இந்து எழுச்சியின் விஸ்வரூபம் - குமரி

சிறந்த பண்பாடும் , கலாச்சாரமும் , பாரம்பரியமும் கொண்ட இந்து சமுதாயப் பெருமக்கள் வாழும் கன்யாகுமரி மாவட்டத்தின் பண்பாட்டைச் சீரழிக்கும் நோக்குடன் , ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கிறிஸ்தவ மிஷினரிகள் இந்து சமுதாயத்தில் பல பிளவுகளை ஏற்படுத்தியும் , ஆசை காட்டியும் , அச்சுறுத்தியும் மத மாற்றம் செய்தனர் . இதன் விளைவாக இந்துக்களின் எண்ணிக்கை குமரியில் குறையத் துவங்கியது .

மேலும் படிக்க

மதமாற்றத்தை முறியடிக்க களத்தில் இந்துமுன்னணி

அன்பு மதம் என்ற பெயரில் ஆசைகாட்டி, அச்சுறுத்தி, ஏழ்மையை, இயலாமையை பயன்படுத்தி தமிழகத்தில் கிறிஸ்தவ மிஷனரிகளின் மதமாற்ற அறுவடை அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது . ஹிந்துக்கள் வணங்கும் கடவுளர்களை சாத்தான் என்றும் பிசாசு என்றும் கூறிக்கொண்டு இவர்கள் செய்யும் அட்டூழியங்கள் கணக்கிலடங்காது .

மேலும் படிக்க

ரத யாத்திரை – தமிழகத்தில் வித்திட்ட ஹிந்து மறுமலர்ச்சி

1995 மார்ச் 19 அன்று தனுஷ்கோடியில் ராம நாம ஜெப வேள்வியில் பூஜை மூர்த்தியாக இருந்து அருள் பாலித்த ஐந்து அடி அத்திமர ஆஞ்சநேயர் திருவுருவத்துடன் ஸ்ரீ கோபால் ஜி அவர்கள் தமிழகம் முழுவதும் யாத்திரைப் புறப்பட்டார் . 1996 பிப்ரவரி 9 ம் தேதி தனுஷ்கோடியில் பிரார்த்தனை செய்து இராமேஸ்வரத்திலிருந்து யாத்திரையை துவக்கினார் . இந்த யாத்திரை துவங்கியதிலிருந்து நிறைவடையும் வரையிலும் , ஸ்ரீ கோபால் ஜி அவர்களே முழு தலைமைப் பொறுப்பேற்று யாத்திரையை நடத்தினார் .

மேலும் படிக்க

விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி விழா

தெய்வீக தமிழகத்தை நாத்தீகத்தால் நாசமாக்கியவர்களுக்கு எதிராக குரல் கொடுக்க தமிழகத்தில் எவரும் இல்லாத காலத்தில்தான் நமது இந்து முன்னணி பேரியக்கம் துவங்கப்பட்டது. 1953 - ல் முதன் முதலாக ஈ.வெ.ரா. பிள்ளையார் சிலையை உடைக்கும் அந்த மாபாதக செயலை துவக்கி வைத்தார் . 1972 - ல் அதன் உச்சகட்டமாக சேலத்தில் நடந்த தி.க. மாநாடு மற்றும் ஊர்வலத்தில் நடந்த அசிங்கங்களை எழுதுவதற்கும் , பேசுவதற்கும் இயலாத காரியம் அந்தளவுக்கு நமது கடவுளைப் பற்றி கொச்சைப் படுத்தி பேசினார்கள் .

மேலும் படிக்க

ஸ்ரீ இராம சேது – பாலம் மீட்பு

இராமர் பாலம் பற்றி மக்கள் எப்போது யோசிக்க ஆரம்பித்தனர். சேது சமுத்திர திட்டத்தின் மூலம் கொழும்பு துறைமுகத்திற்குச் செல்லாமல் தெற்காசிய நாடுகளுக்குச் செல்லலாம் . 36 மணி நேரப் பயணம் மிச்சப்படும் . எரிபொருளைச் சேமிக்கலாம் . தமிழகம் பணம் கொழிக்கும் மாநிலமாக மாறும் என்று தமிழக அரசும் , மத்திய அரசும் கூறுகிறது .

மேலும் படிக்க

பழனி மலையை ஆக்கிரமித்த முஸ்லீம்கள்- சதியை முறியடித்த இந்து முன்னணி

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனிமலையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கத்தோடு சுமார் 60 ஆண்டுகளாக திட்டமிட்டு கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லீம்கள் செயல்பட துவங்கினர் .மொத்தம் உள்ள 13 கடைகளில் 10 படிக் கடைகளை முஸ்லீம்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் முஸ்லீம் கடைகாரர்களுக்கு துணையாக நின்றனர் .

மேலும் படிக்க

நாத்திக நாசகார சக்திகளை எதிர்த்து களத்தில்

திராவிடர் கழகம் கடந்த 60 ஆண்டுகளாக இந்து தெய்வங்களை நமது பண்பாட்டை இழித்தும் பழித்தும் பேசியும் எழுதியும் வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர் திராவிடர் கழகம் சிறுபான்மை கிறிஸ்தவர்களிடம் கைக்கூலி வாங்கிக்கொண்டு தமிழனையும் , தமிழ்மொழியையும் பாதுகாப்பதாக போலிவேடம் பூண்டு தமிழக இந்துக்களை ஏமாற்றி காலம் தள்ளினர்.

மேலும் படிக்க

திருவாரூர் தேர்

ஆசியாவிலேயே பெரிய, பிரம்மாண்டமான தேர் திருவாரூர் தேர். திருவாரூர் தேர் அழகு என்ற பேச்சு வழக்கு இன்றும் தமிழகத்தில் உண்டு . அந்தத்தேர் ஓடுவதற்கு முன்னும் , பின்னும் புதிதாக சாலை போடப்பட வேண்டும் வேண்டும் என்றால் அதன் எடையை , அமைப்பைப் பார்த்துக்கொள்ளுங்கள் . உலகப் புகழ் வாய்ந்த புரி ஜகந்நாதர் தேர் அந்த மாநிலத்தில் பெருமைமிகு ஒன்று . அதற்காக தேரோட்டத்தின் வேலைகளை ஓரிஸா மாநில அரசு ஆறு மாதங்களுக்கு முன்பே துவங்கிவிடும் .

மேலும் படிக்க

10,008 திருவிளக்கு பூஜை

இந்துக்களிடையே விழிப்புணர்வு இல்லாத காலகட்டம் . நாத்திகம் ஓங்கி அடித்த போது அரசியல்வாதிகளும் , ஆன்மீகவாதிகளும் , கண்மூடி வாய்மூடி இருந்த சூழ்நிலையில் 1980 ஆம் ஆண்டு இந்து முன்னணி ஆரம்பித்து இந்துகளுக்காக போராடி வாதாடி பரிந்து பேசி இந்துக்களுக்கிடையே ஒற்றுமையையும் , விழிப்புணர்வையும் இந்து சமுதாயத்தை சூழ்ந்து நிற்கும் அபாயங்களைப் பற்றி சொல்லிச்சொல்லி இந்துக்களை வலுப்படுத்தி வந்தது .

மேலும் படிக்க