2012

2012 - கோயில் நில மதிப்பு

மூன்று லட்சத்திற்கு விற்கப்பட இருந்த சங்கரநாராயண சுவாமி கோவில் இடம் 9 கோடியாக உயர்வு இந்து முன்னணி சாதனை. திருநெல்வேலி மாவட்டம், அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான வடக்கு புத்தூர் கிராமத்தில் உள்ள, 5 ஏக்கர் நிலத்தினை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் மனோ கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்ட இந்து சமய அறநிலையத்துறை ரூ.3, 21,865/- க்கு பல்கலைக்கழகத்திற்கு விற்பனை செய்ய 08.02.2012ல் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நாளிதழில் அறிவிப்பு வெளியிட்டார். அதுகுறித்த ஆட்சேபணை 12.03.12 க்குள் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்து வழக்கறிஞர் முன்னணி மாநிலச் செயலாளர் பலகோடி ரூபாய் மதிப்புள்ள 5 ஏக்கர் இடம் ரூ.3, 21,865/-க்கு விற்பதற்கு ஆட்சேபனை தெரிவித்து சார் பதிவாளர் அலுவலகம், திருக்கோவில் நிர்வாகம், பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தகவல் அறியும் சட்டம் மூலம் பல தகவல்களை பெற்று விற்பனை அறிவிப்பை ரத்து செய்து புதிய விலை நிர்ணயம் செய்யக்கோரி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்களிடம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் 12.03.2012 மற்றும் 27.03.2012 நடந்த விசாரணையில் இந்து முன்னணி சார்பில் மாநில செயலாளர் தனது ஆட்சேபனையை பதிவு செய்தார்.

 

இறுதியில் 05.05.2012ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு J.சந்திரகுமார் அவர்கள் ரூ.3, 21,865/- ஆக நிர்ணயம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து ரூ.9,94,01,000 (ரூபாய் ஓன்பதுகோடியே தொன்னூற்று நான்காயிரத்து ஆயிரத்து ஓராயிரம்) என நிர்ணயம் செய்து புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் திருக்கோயிலுக்கு சுமார் 9 கோடியே 91 லட்சம் ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

சுமார் 3 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட இருந்த சங்கரநாராயண சுவாமி கோவில் இடம் இந்து முன்னணியின் கடும் முயற்சியால் ரூ.9,94,01,000/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது மேற்படி இடம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண திருக்கோயில் வசமே உள்ளது, கோவில் இடம் அடிமாட்டு விலைக்கு விற்கப்படுவது இந்து முன்னணியால் தடுக்கப்பட்டது.

2012 - பழனி மலை


பழனி மலையை ஆக்கிரமித்த முஸ்லீம்கள்...சதியை முறியடித்த இந்து முன்னணி... முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலையில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் நோக்கத்தோடு மொத்தம் உள்ள 13 கடைகளில் 10 படிக்கடைளை முஸ்லீம்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர்.

பழனிமலையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கத்தோடு சுமார் 60 ஆண்டுகளாக திட்டமிட்டு கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லீம்கள் செயல்பட துவங்கினர். நடவடிக்கை எடுக்க வேண்டிய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் முஸ்லிம் கடைக்காரர்களுக்கு துணையாக நின்றனர். 2000 ஆம் ஆண்டிலிருந்து இந்த அநீதியை எதிர்த்து இந்து முன்னணி பேரியக்கம் தொடர்ந்து 14 ஆண்டுகள் போராடியது.

என்ன அநியாயம், முருகப்பெருமானை தரிசிக்க மலை ஏறும் போது, வழி நெடுகிலும் முஸ்லீம் கடைகள் எண்ணிப் பாருங்கள். மசூதிக்கு சொந்தமான இடத்தில் இந்துக்கள் கடை வைக்க முடியுமா? இப்படி ஆக்கிரமித்து கொண்ட முஸ்லிம்கள் பக்தர்களை அச்சுறுத்தும் விதமாக கோவிலின் புனிதத்தை கெடுக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வந்தனர். மலை ஏறும் போது தாய்மார்கள் படிபூஜை செய்வது வழக்கம். படிபூஜை செய்யும் தாய்மார்களை ஆபாசமாக புகைப்படம் எடுப்பது, அநாகரிகமான ஆபாச வார்த்தைகள் பேசுவது, கிண்டல் கேலி செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

பக்தர்கள் இவர்களுக்கு பயந்து மலை ஏறும் சூழ்நிலை ஏற்பட்டது. முஸ்லீம் கடைக்காரர்களின் அடாவடி நாளுக்கு நாள் அதிகரித்தது. வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் மாட்டுக்கறியை மலையின் உச்சிக்கே கொண்டு சென்று சாப்பிடத் தொடங்கினர். இந்த அநியாயங்களை பார்த்த மக்கள் மிகுந்த மனவேதனை அடைந்தனர்.

இவர்களை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த இந்து முன்னணி தொண்டர்கள் களம் இறங்கினர். 2012 ஆம் ஆண்டு பக்ரித் பண்டிகையின் போது படிப்பாதை, மலையின் உச்சி என அனைத்து இடங்களிலும் ஆங்காங்கே மறைந்திருந்த இந்து முன்னணி தொண்டர்கள், முஸ்லீம்களின் நடவடிக்கையை கண்காணித்தனர். வழக்கம் போல மாட்டுப் பிரியாணியை கொண்டு வந்து படிப்பாதை, கோவில் வளாகம் போன்ற இடங்களில் முஸ்லீம்கள் சாப்பிட தொடங்கினர்.

மறைந்திருந்த இந்து முன்னணியினர் சுற்றி வளைத்து இவர்களை கையும் களவுமாக பிடித்தனர். இதனை தொடர்ந்து, இந்த முஸ்லீம் கடைகளை அப்புறப்படுத்த வேண்டுமென கோரிக்கைகள் வலு பெற்று போராட்டம் வெடித்தது.

வீரத்துறவி. இராம.கோபாலன் அவர்கள் தலைமையில் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏற்கனவே இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அறநிலையத் துறை அதிகாரிகள் தொடர்ந்து முஸ்லீம்களுக்கு ஆதரவாக, இந்த வழக்கில் சரியாக வாதாடாமல் காலம் கடத்தி வந்தனர்.

அறநிலையத்துறையைச் சேர்ந்த இணை ஆணையர், நிர்வாக அதிகாரியாக பாஸ்கர் என்கிற நேர்மையான அதிகாரி அந்த நேரத்தில் பழனி கோவிலுக்கு புதிதாக பொறுப்பேற்றார். நீதி மன்றத்தில் உள்ள வழக்கை விரைந்து நடத்த நடவடிக்கை எடுத்து வேண்டும் என இந்து முன்னணி சார்பில் ஆதாரங்களை திரட்டி மனு கொடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அதிகாரி பாஸ்கர் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்கான கோப்புகளை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார். நீதி மன்றத்தில் வழக்கு விரைவாக நடைபெற இந்து முன்னணி வழக்கறிஞர்கள் வழக்குகளை கண்காணித்து சரியான பாதையில் வழக்குகள் செல்ல உதவினர். நீண்ட விசாரணைக்குப் பிறகு நீதி மன்ற தீர்ப்பு பழனி முருகனுக்கும், இந்து சமுதாயத்திற்கும் ஆதரவாக வந்தது.

மேலும் படிக்க